sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சமரச தீர்வு மையத்தில் நடிகர் ரவி, ஆர்த்தி ஆஜர்

/

சமரச தீர்வு மையத்தில் நடிகர் ரவி, ஆர்த்தி ஆஜர்

சமரச தீர்வு மையத்தில் நடிகர் ரவி, ஆர்த்தி ஆஜர்

சமரச தீர்வு மையத்தில் நடிகர் ரவி, ஆர்த்தி ஆஜர்


ADDED : நவ 28, 2024 01:13 AM

Google News

ADDED : நவ 28, 2024 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சினிமா எடிட்டர் மோகனின் மகன் நடிகர் ஜெயம் ரவி. இவருக்கும், சீரியல் தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்திக்கும், 2009ல் திருமணம் நடந்தது; இரண்டு மகன்கள் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக, இவர்கள் தனித்தனியாக வசித்து வருகின்றனர். மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி, ரவி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த, சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி, இருவருக்கும் இடையேயான குடும்ப பிரச்னை தொடர்பாக, சமரச தீர்வு மையத்தின் வாயிலாக பேச்சு நடத்த உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, நேற்று சமரச தீர்வு மையத்தில், ரவி, ஆர்த்தி ஆஜராகினர். இருவரிடம் ஒரு மணி நேரத்துக்கு மேலாக, மத்தியஸ்தர் பேச்சு நடத்தினார். பின், விசாரணை டிச., 7க்கு தள்ளிவைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us