sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு கூடுதலாக 15 நாட்கள் வழங்க வேண்டும்: கிருஷ்ணசாமி கோரிக்கை

/

 எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு கூடுதலாக 15 நாட்கள் வழங்க வேண்டும்: கிருஷ்ணசாமி கோரிக்கை

 எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு கூடுதலாக 15 நாட்கள் வழங்க வேண்டும்: கிருஷ்ணசாமி கோரிக்கை

 எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு கூடுதலாக 15 நாட்கள் வழங்க வேண்டும்: கிருஷ்ணசாமி கோரிக்கை


ADDED : நவ 26, 2025 01:08 AM

Google News

ADDED : நவ 26, 2025 01:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: போலி வாக்காளர்கள் நீக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. இதை அனைவரும் வரவேற்று ஆதரிக்க வேண்டும். ஒரு மாத அவகாசம் மட்டுமே இருப்பதால் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு கூடுதலாக 15 நாட்கள் வழங்க வேண்டும் என விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

அவர் கூறியது: புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாடு ஜன. 7ல் மதுரையில் நடைபெறுகிறது. இங்கு சுந்தர்ராஜபுரம், சோலைசேரி பகுதிகளில் கிராமத்தினரிடையே பிரச்னை ஏற்பட்டு கோயில்களை மூடி வைத்துள்ளனர். கோயில்களை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

20 ஆண்டுகளுக்கு பின் தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் நடக்கிறது. போலி வாக்காளர்கள் நீக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஒரு மாத அவகாசம் மட்டுமே இருப்பதால் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. கூடுதலாக 15 நாட்கள் வழங்க வேண்டும்.

அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியினரிடம் பூர்த்தி செய்த இப் படிவங்களை தராமல் நேரடியாக அதிகாரிகளிடம் வழங்க வேண்டும்.

தேசிய அளவிலான பாடத்திட்டம் தரமாக இருக்கும்போது போட்டியாக தமிழகத்தில் பாடத்திட்டம் மாற்றப்படும், எனக் கூறுவது அவசியமற்றது.

மதுரை மாநாட்டில் அரசியல் யூகங்களுக்கு வழி வகுக்காத வகையில் எந்த சாயமும் இல்லாமல் மாநாடு நடைபெறும். மாநாட்டிற்கு பின்னரே அரசியல் மற்றும் கூட்ட நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும். ஆட்சி அமைந்த உடன் இரண்டு லட்சம் அரசு ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது. அது குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us