ADDED : ஆக 29, 2025 04:38 AM
சென்னை: பயணியர் தேவையை கருத்தில் வைத்து, ஐந்து விரைவு ரயில்கள், கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளன.
தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஆந்திர மாநிலம் திருப்பதி - மன்னார்குடி விரைவு ரயிலில் இரு மார்க்கத்திலும், வரும் செப்., 4 முதல், ஒரு இரண்டாம் வகுப்பு 'ஏசி' பெட்டி இணைத்து, இயக்கப்படும்
உத்தர பிரதேச மாநிலம் பனாரஸ் - ராமேஸ்வரம் வாராந்திர விரைவு ரயில், வரும் 31ம் தேதி இரண்டு 'ஏசி' பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்.
தற்காலிக கூடுதல் பெட்டிகள் தாம்பரம் - செங்கோட்டை சிலம்பு விரைவு ரயிலில், இன்று முதல் அக்., 31 வரை, 2ம் வகுப்பு 'ஏசி'யில் - 1, மூன்றாம் வகுப்பு 'ஏசி' - 2, மூன்று ஸ்லீப்பர் பெட்டிகள், ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்பட உள்ளது
சென்ட்ரல் - கேரள மாநிலம் திருவனந்தபுரம் விரைவு ரயில், வரும் 31 முதல் நவ., 2 வரை; சென்ட்ரல் - கேரள மாநிலம் ஆலப்புழா விரைவு ரயில், இன்று முதல் அக்., 31 வரை, ஒரு இரண்டாம் வகுப்பு 'ஏசி' பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது
கோவை - ராமேஸ்வரம் விரைவு ரயில், செப்., 2 முதல் அக்., 28 வரை, ஒரு 'ஸ்லீப்பர்' பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.