தாம்பரம் - செங்கோட்டை ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
தாம்பரம் - செங்கோட்டை ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
ADDED : ஜூன் 18, 2025 10:54 PM
சென்னை:தாம்பரம் - செங்கோட்டை, தாம்பரம் - நாகர்கோவில் விரைவு ரயில்கள், தலா ஏழு பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு இயக்கப்பட உள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
தாம்பரம் - செங்கோட்டை சிலம்பு விரைவு ரயில் இரு மார்க்கத்திலும், நாளை முதல் ஆக., 27ம் தேதி வரை, இரண்டாம் வகுப்பு 'ஏசி' பெட்டி - 1, மூன்றாம் வகுப்பு 'ஏசி' பெட்டி - 2, ஸ்லீப்பர் பெட்டி - 3, ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி என, ஏழு பெட்டிகள் கூடுதலாக இணைத்து இயக்கப்படும்.
தாம்பரம் - நாகர்கோவில் விரைவு ரயில் இரு மார்க்கத்திலும், இன்று முதல் ஆகஸ்ட் 28ம் தேதி வரை, இரண்டாம் வகுப்பு 'ஏசி' பெட்டி - 1, மூன்றாம் வகுப்பு 'ஏசி' பெட்டி - 2, ஸ்லீப்பர் பெட்டி - 3, ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி என, ஏழு பெட்டிகள் கூடுதலாக இணைத்து இயக்கப்பட உள்ளன
சென்ட்ரல் - திருவனந்தபுரம் விரைவு ரயிலில், இரண்டாம் வகுப்பில் ஒரு 'ஏசி' பெட்டி, வரும் 27 முதல் ஆகஸ்ட் 27 வரை இணைத்து இயக்கப்படுகிறது
சென்ட்ரல் - ஆலப்புழா விரைவு ரயிலில், இரண்டாம் வகுப்பில் ஒரு 'ஏசி' பெட்டி, வரும் 25 முதல் ஆக., 26 வரை இணைத்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

