தீபாவளி நெரிசலுக்கு தீர்வு: விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்
தீபாவளி நெரிசலுக்கு தீர்வு: விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்
UPDATED : செப் 06, 2025 01:55 AM
ADDED : செப் 06, 2025 01:09 AM

சென்னை:'தீபாவளி பண்டிகையை ஒட்டி, விரைவு ரயில்களில் ஓரிரு கூடுதல் பெட்டிகள் இணைத்து இ யக்கப்படும்' என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, அக்டோபர் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னை போன்ற பெரிய நகரங்களில் வசிக்கும் லட்சக்கணக்கானோர், சொந்த ஊர்களுக்கு சென்று வருவர்.
வழக்கம் போல இந்த ஆண்டும், தீபாவளிக்கு ரயிலில் டிக்கெட் முன்ப திவு துவங்கிய சில நிமிடங்களில் முடிந்து விட்டது. சிறப்பு ரயில்கள் அறிவிப் புக்காக, பொது மக்கள் காத்திருக்கின்றனர்.
எனவே, பயணியர் தேவை மிக்க வழித்தடங்களில், தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். விரைவு ரயில்களில் அதிகபட்சமாக 24 பெட்டிகள் வரை இணைத்து இயக்க முடியும்.
எனவே, கொல்லம், செங்கோட்டை, நாகர்கோவில், திருநெல்வேலி, கோவை, மதுரை உள்ளிட்ட நெரிசல் மிக்க வழித்தடங்களில் செல்லும் விரைவு ரயில்களில், ஓரிரு பெட்டிகள் கூடுதலாக இணைத்து இயக்கப்படும்.
இதனால், காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணியருக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.