ADDED : பிப் 02, 2026 03:12 AM

அ நிறம் | அளவு
சென்னை: லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் பொறுப்பு, கூடுதலாக, ஐ.ஜி., துரைகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநராக பணிபுரிந்த, டி.ஜி.பி., அபய்குமார் சிங் நேற்று முன் தினம் ஓய்வு பெற்றார்.
இதனால், அவர் வகித்து வந்த இயக்குநர் பொறுப்பு, கூடுதலாக அதே துறையில், ஐ.ஜி.,யாக பணிபுரியும் துரைகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவு கடிதத்தை, மாநில சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமனுக்கு, உள்துறை செயலர் தீரஜ்குமார் அனுப்பி உள்ளார்.
