sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

த.வெ.க.,வில் இணைந்தனர் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார்!

/

த.வெ.க.,வில் இணைந்தனர் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார்!

த.வெ.க.,வில் இணைந்தனர் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார்!

த.வெ.க.,வில் இணைந்தனர் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார்!

19


UPDATED : ஜன 31, 2025 03:02 PM

ADDED : ஜன 31, 2025 02:05 PM

Google News

UPDATED : ஜன 31, 2025 03:02 PM ADDED : ஜன 31, 2025 02:05 PM

19


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் நடந்த விழாவில், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோர் கட்சியில் இணைந்தனர். ஆதவ் அர்ஜூனாவுக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நிர்மல் குமாருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

நடிகர் விஜய்யின் த.வெ.க., தொடங்கி ஓராண்டை எட்ட உள்ளது. கட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு நிர்வாகிகளை நிரப்புவதில் விஜய் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன், விஜய்யை அவரது பனையூர் அலுவலகத்தில் லாட்டரி மார்ட்டின் மருமகனும், வி.சி.க., முன்னாள் நிர்வாகியுமான ஆதவ் அர்ஜூனா சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் மூலம் அவர் தவெகவில் இணைய இருப்பதாக பேச்சுக்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், இன்று (ஜன.,31) சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் நடந்த விழாவில், ஆதவ் அர்ஜூனா இணைந்தார். அதேபோல், அ.தி.மு.க., ஐ.டி., பிரிவு இணைச் செயலாளர் நிர்மல் குமாரும் விஜய் முன்னிலையில் த.வெ.க.,வில் இணைந்தார். ஆதவ் அர்ஜூனாவுக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. நிர்மல் குமாருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

முன்னதாக ஆட்சியில் சம பங்கு என விஜய் பேசியதை விசிகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த போது ஆதவ் அர்ஜூனா வரவேற்றார். தொடர்ந்து கட்சித்தலைமையின் எண்ணத்துக்கு மாறாக அவர் பேசிய கருத்துக்கள் சர்சையை கிளப்பியது. தி.மு.க., மற்றும் விசிக இடையே மோதல் சூழல் உருவானதை தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் அக்கட்சியில் இருந்தும் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us