ADDED : அக் 15, 2024 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, : கனமழை எச்சரிக்கை காரணமாக, தி.மு.க., அரசை கண்டித்து, வடலுார், திண்டிவனம் மற்றும் சேலத்தில், இம்மாதம் நடக்க இருந்த பொதுக்கூட்டங்கள், டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக, பா.ம.க., அறிவித்து உள்ளது.
அக்கட்சி தலைமையின் அறிக்கை:
தி.மு.க., அரசை கண்டித்து, நாளை மறுதினம் வடலுாரிலும், 20-ல் திண்டிவனத்திலும், 26ல் சேலத்திலும் பா.ம.க., சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று கூறப்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்தக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுகின்றன.
டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில், இந்த பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.