sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அ.தி.மு.க., ஆட்சியில் தி.மு.க., செய்யாத அரசியலா ? கேள்விகளால் விளாசினார் இ.பி.எஸ்.,

/

அ.தி.மு.க., ஆட்சியில் தி.மு.க., செய்யாத அரசியலா ? கேள்விகளால் விளாசினார் இ.பி.எஸ்.,

அ.தி.மு.க., ஆட்சியில் தி.மு.க., செய்யாத அரசியலா ? கேள்விகளால் விளாசினார் இ.பி.எஸ்.,

அ.தி.மு.க., ஆட்சியில் தி.மு.க., செய்யாத அரசியலா ? கேள்விகளால் விளாசினார் இ.பி.எஸ்.,

19


UPDATED : அக் 07, 2024 11:52 AM

ADDED : அக் 07, 2024 11:49 AM

Google News

UPDATED : அக் 07, 2024 11:52 AM ADDED : அக் 07, 2024 11:49 AM

19


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: 'மக்களை காக்க வேண்டியது அரசின் கடமை. அ.தி.மு.க., ஆட்சியின் போது தி.மு.க., அரசியல் செய்ய வில்லையா?' என அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பினார்.

சேலத்தில் இ.பி.எஸ்., நிருபர்களுக்கு அளித்த பேட்டி: விமான சாகச நிகழ்ச்சியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இது தான் உயிரிழப்பிற்கு காரணம். மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மக்களை காக்க வேண்டியது அரசின் கடமை.

அ.தி.மு.க., ஆட்சியின் போது, எதிர்க்கட்சியான தி.மு.க., அரசியல் செய்ய வில்லையா? விமான சாகச நிகழ்ச்சிக்கு முதல்வர் தான் அழைப்பு விடுத்தார். அவர் தான் பொறுப்பு. அரசின் அழைப்பை நம்பி வந்த மக்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாதது அரசின் தவறு.

அடிப்படை வசதிகள்

தமிழக அரசின் செயலற்றத் தன்மையால் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் கூடும்போது, அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரவில்லை. எத்தனை பேர் நிகழ்ச்சியில் பங்கேற்பர் என்பதை அரசும், உளவுத்துறையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சாக்குபோக்கு கூறி தப்பிப்பது சரியல்ல. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.






      Dinamalar
      Follow us