பெண்ணை மிரட்டி 6 மாதமாக வன்கொடுமை செய்த திமுக ஒன்றிய செயலாளர்; இபிஎஸ் கண்டனம்
பெண்ணை மிரட்டி 6 மாதமாக வன்கொடுமை செய்த திமுக ஒன்றிய செயலாளர்; இபிஎஸ் கண்டனம்
ADDED : நவ 22, 2025 02:38 PM

சென்னை: பெண்ணை மிரட்டி 6 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்த திமுக ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை; விழுப்புரம் அருகே திமுக ஒன்றியச் செயலாளர், பெண் ஒருவரை 6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. 'காவல்துறையால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. நான் முக்கிய புள்ளி' எனக் கூறி, தனது திமுக பதவியை வைத்து கொண்டு இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
திமுக ஆட்சியில், திமுகவினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலைக்கு என்ன பதில் வைத்துள்ளார் முதல்வர்? அமைச்சருக்கு நெருக்கமான அனுதாபி முதல், பதவியை வைத்து கொண்டு கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ள ஒன்றியச் செயலாளர் வரை, இந்த திமுக பாலியல் SIR-களைக் கூட கட்டுப்படுத்த முடியாத தலைவராக தான் இந்த முதல்வர் இருக்கிறார்.
தன் கட்சி காமுகர்களை ஒடுக்க முடியாத இந்த முதல்வர், நம் தமிழகத்தை எப்படி பாதுகாக்கப் போகிறார்? உடனடியாக திமுக ஒன்றியச் செயலாளர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

