அ.தி.மு.க., ஐ.டி., விங் யாரையும் வசைபாடக்கூடாது: இ.பி.எஸ்., அறிவுரை
அ.தி.மு.க., ஐ.டி., விங் யாரையும் வசைபாடக்கூடாது: இ.பி.எஸ்., அறிவுரை
ADDED : ஜன 03, 2024 02:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சமூக வலைத்தளங்களில் அ.தி.மு.க., ஐ.டி., விங் யாரையும் வசைபாடக்கூடாது என அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் சமூகவலைதள செயல்பாடுகள் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., ஆலோசனை மேற்கொண்டார். பின்னர்,‛‛சமூக வலைத்தளங்களில் அ.தி.மு.க., ஐ.டி., விங் யாரையும் வசைபாடக்கூடாது.
அநாகரிகமாக யாரையும் விமர்சிக்கக்கூடாது. ஐ.டி., விங் எனது நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும். மற்ற கட்சி ஐ.டி., விங் போன்று வெறுப்பை உண்டாக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.