தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்
தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்
UPDATED : ஜன 25, 2026 05:21 PM
ADDED : ஜன 25, 2026 05:20 PM

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தவெகவில் இணைந்தார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கு.ப. கிருஷ்ணன், மாமல்லபுரத்தில் தவெக தலைவர் நடிகர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை நடைபெற்ற ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் கு.ப. கிருஷ்ணன்.
பின்னர் தமிழர் பூமி என்ற கட்சியை தொடங்கி 2001ம் ஆண்டு திமுக கூட்டணியில் இணைந்தார். அதன் பிறகு அதிமுகவில் மீண்டும் சேர்ந்து கொண்டார். அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போது ஓ. பன்னீர்செல்வத்தின் பக்கம் சென்றார். சட்டசபை தேர்தலில் ஸ்ரீரங்கம் மற்றும் ஆலங்குடி தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர்.
தவெகவில் இணைந்த பின்னர் நிருபர்களுக்கு கு.ப. கிருஷ்ணன் அளித்த பேட்டி;
தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் நிகழ போகிறது. விஜய் தலைமையில் நல்லாட்சி அமைய போகிறது. நாளையே தேர்தல் நடந்தாலும் விஜய் தான் ஆட்சியை பிடிப்பார். ஆட்சி மாற்றம் உறுதி.
இவ்வாறு கு.ப. கிருஷ்ணன் கூறினார்.

