sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இரு வகையான கணக்கெடுப்பு வேளாண் துறை உத்தரவு

/

இரு வகையான கணக்கெடுப்பு வேளாண் துறை உத்தரவு

இரு வகையான கணக்கெடுப்பு வேளாண் துறை உத்தரவு

இரு வகையான கணக்கெடுப்பு வேளாண் துறை உத்தரவு


ADDED : அக் 30, 2025 01:24 AM

Google News

ADDED : அக் 30, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பயிர் பாதிப்பு குறித்து, இரு வகையான கணக்கெடுப்புகளை மேற்கொள்ள வேளாண் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நடப்பாண்டு இயல்பை விட அதிக பரப்பளவில் குறுவை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. உற்பத்தியான நெல்லை, உணவுத்துறை முறையாக கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தியது. இதனால், மழையில் நனைந்து, பல டன் நெல் மூட்டைகள் முளைத்து உள்ளன.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை துவங்கியதால், அறுவடைக்கு தயாராக இருந்த, 1.45 லட்சம் ஏக்கர் நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டன. சம்பா சாகுபடி செய்யப்பட்ட 40 ஆயிரம் ஏக்கர் பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளன.

குறுவை மற்றும் சம்பா பயிர்கள் பாதிப்பு குறித்து, இரண்டு வகையான கணக்கெடுப்புகள் நடத்த, வேளாண்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நீரில் மூழ்கியுள்ள பயிர்கள் குறித்தும், 33 சதவீதத்திற்கும் மேல் சேதம் அடைந்துள்ள பயிர்கள் குறித்தும், தனித்தனியாக கணக் கெடுப்பு நடந்து வருகிறது.

வேளாண்மை, வருவாய் துறையினர் இணைந்து இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்த, முதல் கட்ட அறிக்கையை, 2ம் தேதிக்குள் அனுப்ப, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்களிடம் அறிக்கை பெற்ற பின், பேரிடர் மேலாண்மை நிதியில், இழப்பீடு வழங்குவது குறித்து, அரசுக்கு வேளாண்துறை பரிந்துரைக்க உள்ளது.






      Dinamalar
      Follow us