sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பாமகவுக்கு ஓட்டுப்போடுங்க: அதிமுகவினருக்கு ராமதாஸ் ‛‛ஐஸ்''

/

பாமகவுக்கு ஓட்டுப்போடுங்க: அதிமுகவினருக்கு ராமதாஸ் ‛‛ஐஸ்''

பாமகவுக்கு ஓட்டுப்போடுங்க: அதிமுகவினருக்கு ராமதாஸ் ‛‛ஐஸ்''

பாமகவுக்கு ஓட்டுப்போடுங்க: அதிமுகவினருக்கு ராமதாஸ் ‛‛ஐஸ்''

7


ADDED : ஜூலை 04, 2024 11:46 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 11:46 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''அதிமுக.,வினர் தங்களது ஓட்டுகளை வீணடிக்கக்கூடாது; பாமக.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும்'' என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக - பாமக - நாம் தமிழர் கட்சி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இடைத்தேர்தலில் பாமக வெற்றி பெற கூடாது என திமுக.,வினர் குறுக்குவழிகளில் முயற்சிக்கின்றனர்.

பாமக.,வுக்கு ஓட்டுப்போட்டால், நலத்திட்டங்கள் கிடைக்காது, பணிகள் நடக்காது என ஆளும்தரப்பினர் கூறவதாக தகவல் வெளியாகிறது. திமுக.,வின் அத்துமீறல்களை மீறி 40 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் பாமக வெற்றி பெறும்.

அதிமுக.,வினர் தங்களது ஓட்டுகளை வீணடிக்கக்கூடாது; பாமக.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும். அதிமுக, பாமக.,வுக்கு பொது எதிரி திமுக தான். கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய முதல்வர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தவிர்க்க முடியாதது. இவ்வாறு அவர் கூறினார்.

பதவி விலக வேண்டும்

பாமக தலைவர் அன்புமணி 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டதாவது: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சோகம் விலகும் முன்பே விழுப்புரம் அருகே டி.குமாரமங்கலம் என்ற இடத்தில் கள்ளச்சாராயம் குடித்து முதியவர் சாவு. தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து எவ்வளவு பேர் உயிரிழந்தாலும், கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த மாட்டோம் என்ற மனநிலையில் தமிழக அரசும், போலீசாரும் இருப்பதையே இது காட்டுகிறது.
கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும். கள்ளச்சாராய சாவுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.








      Dinamalar
      Follow us