sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.400 கோடி ஊழல்; அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அ.தி.மு.க., புகார்

/

ரூ.400 கோடி ஊழல்; அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அ.தி.மு.க., புகார்

ரூ.400 கோடி ஊழல்; அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அ.தி.மு.க., புகார்

ரூ.400 கோடி ஊழல்; அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அ.தி.மு.க., புகார்

12


ADDED : நவ 15, 2024 09:50 AM

Google News

ADDED : நவ 15, 2024 09:50 AM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் ரூ.400 கோடி ஊழல் செய்ததாக அ.தி.மு.க., சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, ஜாமினில் வெளியே வந்தார். வந்த உடனே, மாற்றி அமைக்கப்பட்ட அமைச்சரவையில் மீண்டும் அவர் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ரூ.400 கோடி ஊழல் செய்ததாக அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில இணை செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

2021 முதல் 2023ம் ஆண்டு வரையில் 45,800 மின்மாற்றிகள் வாங்குவதற்கு, ரூ.1,182 கோடி மதிப்பில் 10 டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ததில், டெண்டர் விதிகளை முறையாக பின்பற்றாததால், அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us