ADDED : அக் 24, 2025 02:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ.தி.மு.க.,வில் பிரிந்து கிடப்போர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றுதான் சொன்னேன். ஆனால், கட்சித் தலைமைக்கு பத்து நாட்கள் கெடு விதித்திருப்பதாக செய்தி வெளியாகி விட்டது. பத்து நாட்களுக்குள் இதற்கான பேச்சு துவங்க வேண்டும். இதற்காக ஒரு மாதத்தில் இருந்து ஒன்றரை மாதம் கூட எடுத்துக் கொள்ளலாம் என்று தான் சொல்லி இருந்தேன்.
மாதங்கள் கடந்து விட்டன. ஆனாலும், இதுவரை ஒன்றும் நடக்கவில்லை. வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனாலும், இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை. பொறுத்திருந்து பாருங்கள்; எல்லாம் நல்லதாகவே நடந்து முடியும். ராணுவ கட்டுப்பாடோடு இருந்த அ.தி.மு.க.,வில் இன்று பிரச்னைகள் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுவது, சொல்பவரின் கருத்துதானே தவிர, என் கருத்து அல்ல.
- செங்கோட்டையன்
முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,

