sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டி செலவு கணக்கு கேட்ட மனு தள்ளுபடி

/

அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டி செலவு கணக்கு கேட்ட மனு தள்ளுபடி

அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டி செலவு கணக்கு கேட்ட மனு தள்ளுபடி

அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டி செலவு கணக்கு கேட்ட மனு தள்ளுபடி


ADDED : ஜன 12, 2024 12:30 AM

Google News

ADDED : ஜன 12, 2024 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:மதுரை மாவட்டம், அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டியின் போது வரவு - செலவு கணக்கை முறையாக பராமரித்து அரசிடம் ஒப்படைக்க கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு:

பொங்கலையொட்டி, அலங்காநல்லுாரில் நடக்கும் ஜல்லிக்கட்டில் சில ஆண்டுகளாக ஊழல், முறைகேடுகள் அதிகரித்துள்ளன; உச்சநீதிமன்ற உத்தரவுகள் மீறப்படுகின்றன. இரு ஆண்டுகளுக்கு முன் காளையை அடக்கிய வீரர்களுக்கு தங்க காசு வழங்கியதில் மோசடி நடந்தது.

தங்க காசு, பரிசு பொருட்கள், பணத்தை விழாக் குழுவினர் வசூலிக்கின்றனர். கணக்கு விபரங்களை வருவாய் துறையினரிடம் சமர்ப்பிப்பதில்லை. வரவு - செலவு கணக்கை முறையாக பராமரிக்க, உத்தரவிடக் கோரி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.

அரசு மற்றும் விழாக் குழு தரப்பு: பணம் வசூலிக்கப்படுவதில்லை. எவ்வித புகாரும் இதுவரை வரவில்லை. கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் டோக்கன் வழங்கப்படும். அதன் விபரம் இ - மெயில் வாயிலாக தெரிவிக்கப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள்: நன்கொடையாளர்கள், காளைகளின் உரிமையாளர்கள் தரப்பில் இதுவரை எவ்வித புகாரும் வரவில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us