ADDED : மார் 19, 2024 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., சார்பில் போட்டியிடுவோரிடம், விருப்ப மனு பெறும் பணி நேற்று துவங்கியது.
கட்சி அலுவலகத்தில் பிரேமலதா கூறியதாவது:
தே.மு.தி.க., அலுவலகத்தில், விருப்ப மனு பெறும் பணியை துவக்கி உள்ளோம். இன்றும் விருப்ப மனு பெற உள்ளோம்.
நாளை அதிகாரப்பூர்வமாக கூட்டணி அறிவிப்பை தெரிவிப்போம். யாருடன் கூட்டணி, எந்த தொகுதிகளில் போட்டி, யார் வேட்பாளர் என்ற விபரங்களை தெரிவிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

