sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

யாருடன் கூட்டணி;உரிய நேரத்தில் அறிவிப்போம்: பிரேமலதா

/

யாருடன் கூட்டணி;உரிய நேரத்தில் அறிவிப்போம்: பிரேமலதா

யாருடன் கூட்டணி;உரிய நேரத்தில் அறிவிப்போம்: பிரேமலதா

யாருடன் கூட்டணி;உரிய நேரத்தில் அறிவிப்போம்: பிரேமலதா

5


ADDED : டிச 25, 2025 05:54 PM

Google News

5

ADDED : டிச 25, 2025 05:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: யாருடன் கூட்டணி என்று உரிய நேரத்தில் அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியேற்றிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா நலத்திட்ட உதவிகள் வழங்கி கிறிஸ்துமஸ் பண்டிகையை பொதுமக்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினர்.அதை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

பிரேமலதா அளித்த பேட்டி:

ஜனவரி 9 ஆம் தேதி கடலுாரில் தேமுதிக மாநாடு நடைபெற உள்ளது. மாநாடு நேரத்தில் எங்கள் கூட்டணி குறித்து அறிவிப்பதாக நான் தெளிவாக சொல்லி இருக்கிறேன். வருகின்ற தேர்தல் 2026 தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாடு மக்களுக்கும் மிக மிக முக்கியமான தேர்தல்.எங்கள் கட்சி என்ன முடிவு எடுக்கும் என்பதை முடிவெடுக்கக்கூடியவர்கள் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் தான்.

அதிமுக, பாஜ இடையே நடந்த சந்திப்பு ஏற்கனவே கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகளின் சந்திப்பு அவ்வளவு தான். அதனை தவிர்த்து வேறு எதுவும் இல்லை.அதனால் அந்த நிகழ்வை நாங்கள் மிக சாதாரணமான நிகழ்வாக பார்க்கிறோம். மற்ற கட்சிகளை கலந்து ஆலோசித்து அதற்குப் பிறகு தான் தெளிவான முடிவு கிடைக்கும், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அவர் கருத்தை கூறியுள்ளார்.

தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் என பாஜ, அதிமுக பேச்சுவார்த்தையில் பேசியதாக வரும் தகவல் உண்மையானதா, அந்த லிஸ்டை யார் கொடுத்தது. அதிகாரப்பூர்வமாக அந்த விபரம் தெரிந்த பிறகுதான் அடுத்த கட்ட பதில் சொல்ல முடியும்.இவ்வாறு பிரேமலதா கூறினார்.






      Dinamalar
      Follow us