sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிரதமர் திட்டத்தில் 68,569 வீடு கட்ட ரூ.209 கோடி ஒதுக்கீடு

/

பிரதமர் திட்டத்தில் 68,569 வீடு கட்ட ரூ.209 கோடி ஒதுக்கீடு

பிரதமர் திட்டத்தில் 68,569 வீடு கட்ட ரூ.209 கோடி ஒதுக்கீடு

பிரதமர் திட்டத்தில் 68,569 வீடு கட்ட ரூ.209 கோடி ஒதுக்கீடு


ADDED : அக் 15, 2024 09:25 PM

Google News

ADDED : அக் 15, 2024 09:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில் நடப்பாண்டு, பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ், 68,569 வீடுகள் கட்ட, முதல் கட்டமாக, 209.20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், 2016 - 17ம் ஆண்டு முதல் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கான நிதியில், 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் வழங்குகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை, மாநில அரசு 62 சதவீத நிதியை வழங்குகிறது. வீடு இல்லாத ஏழை குடும்பங்கள் மற்றும் குடிசைகளில் வசிப்பவர்களுக்கு, அடிப்படை வசதிகளுடன் கூடிய, நிலையான வீடுகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.

தமிழக அரசு வழங்கும் கூடுதல் தொகையுடன், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், துாய்மை பாரத இயக்கம் ஆகிய திட்டங்களை ஒருங்கிணைப்பதால், தமிழகத்தில் ஒரு வீட்டிற்கு, 2.83 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், மத்திய அரசின் பங்கு 1.11 லட்சம்; மாநில அரசின் பங்கு 1.72 லட்சம் ரூபாய்.

நடப்பாண்டு தமிழகத்தில், 68,569 வீடுகள் கட்ட, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இவ்வீடுகளுக்கு மொத்தம் 836.82 கோடி ரூபாய் செலவாகும்.

தற்போது முதல் கட்டமாக, மத்திய அரசு 125.52 கோடி; மாநில அரசு 83.68 கோடி என, மொத்தம் 209.20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணையை, ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டு உள்ளார்.






      Dinamalar
      Follow us