sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மருத்துவ கல்லூரியில் சேர மாணவருக்கு அனுமதி

/

மருத்துவ கல்லூரியில் சேர மாணவருக்கு அனுமதி

மருத்துவ கல்லூரியில் சேர மாணவருக்கு அனுமதி

மருத்துவ கல்லூரியில் சேர மாணவருக்கு அனுமதி


ADDED : ஆக 24, 2011 12:30 AM

Google News

ADDED : ஆக 24, 2011 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : கன்னியாகுமரி மூகாம்பிகை மருத்துவ கல்லூரியில் கவுன்சிலிங் மூலம் சீட் பெற்ற மாணவருக்கு அனுமதி வழங்க, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த முகமதுஷேக் அப்துல்லா தாக்கல் செய்த ரிட் மனு: கன்னியாகுமரி மூகாம்பிகை மருத்துவ கல்லூரியில் சேர கவுன்சிலிங் மூலம் 2009ல் எனக்கு அனுமதி கிடைத்தது. சபீக்ஜமால் என்பவருக்கு பதிலாக எனக்கு சீட் ஒதுக்கப்பட்டது. எனினும், எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இதை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தேன். தனி நீதிபதி விசாரித்து மனுவை தள்ளுபடி செய்தார். மருத்துவ கல்வியை தொடர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள எனக்கு மீண்டும் படிக்க வாய்ப்பளிக்க உத்தரவிட வேண்டும் என, கோரினார். நீதிபதிகள் ஜோதிமணி, சுந்தரேஷ் பெஞ்ச் முன் மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் மருத்துவ படிப்பை தொடர இந்த கல்வியாண்டிலேயே அனுமதி வழங்க வேண்டும். பல்கலை கட்டணம் மட்டும் வசூலிக்க வேண்டும் என, பெஞ்ச் உத்தரவிட்டது.








      Dinamalar
      Follow us