முதல்வருக்கும் கவர்னருக்கும் ஈகோ யுத்தம் நடக்கிறது
முதல்வருக்கும் கவர்னருக்கும் ஈகோ யுத்தம் நடக்கிறது
ADDED : ஜன 09, 2025 07:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விஜயகாந்த் பிறந்த ஊர், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள ராமனுஜபுரம் கிராமம். அங்கு விஜயகந்த் நினைவாக திருமண மண்டபம் கட்டப்படும்.
அனைத்து மாநிலங்களிலும் கவர்னரும், ஆளும்கட்சியினரும் இணைந்து செயல்படுகின்றனர். ஆனால், தமிழகத்தில் எதிரும் புதிருமாக உள்ளனர். மூன்றாண்டுகளாக இரு தரப்புக்கும் ஈகோ யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது.
அதனால், முதல்வரும் கவர்னரும் ஒருவரை மற்றவர் அனுசரித்து செல்ல வேண்டும்.
ஒவ்வொரு முறையும் சட்டசபைக்கு கவர்னர் வருவதும், சிறிது நேரத்தில் வெளியேறுவதும் தொடர் கதையாக உள்ளது. இதற்கெல்லாம் கூட நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டுமோ என்னவோ? மொத்தத்தில் இதற்கு நல்ல தீர்வு வேண்டும்.
பிரேமலதா, பொதுச்செயலர், தே.மு.தி.க.,

