sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வெப்பம் அதிகரிப்பால் அசவுகரியம் ஏற்படும்

/

வெப்பம் அதிகரிப்பால் அசவுகரியம் ஏற்படும்

வெப்பம் அதிகரிப்பால் அசவுகரியம் ஏற்படும்

வெப்பம் அதிகரிப்பால் அசவுகரியம் ஏற்படும்


ADDED : பிப் 26, 2024 01:41 AM

Google News

ADDED : பிப் 26, 2024 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நேற்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்தது. ஆனாலும், பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவியது. மாநிலத்தில் அதிகபட்சமாக, கரூர் பரமத்தியில், 38.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.

நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில், 3 செ.மீ., மழை பெய்தது. மாஞ்சோலை, கந்தர்வக்கோட்டையில், 2 செ.மீ., மழை பதிவானது.

தென் மாநிலங்களின் வளிமண்டல கீழடுக்கில் ஒரு சுழற்சி நிலவுகிறது. இதனால், தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் சில பகுதிகளில், இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யலாம்.

சென்னை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை கூடுதலாகும். கடலோரம் அல்லாத மாவட்டங்களில், வெப்பநிலை அதிகரிப்பால், அசவுகரியமான நிலை ஏற்படும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us