sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அவருதான் எங்க ரிப்போர்ட்டிங் ஆபிசர்! துணை முதல்வர் உதயநிதி பற்றி அன்பில் மகேஷ்

/

அவருதான் எங்க ரிப்போர்ட்டிங் ஆபிசர்! துணை முதல்வர் உதயநிதி பற்றி அன்பில் மகேஷ்

அவருதான் எங்க ரிப்போர்ட்டிங் ஆபிசர்! துணை முதல்வர் உதயநிதி பற்றி அன்பில் மகேஷ்

அவருதான் எங்க ரிப்போர்ட்டிங் ஆபிசர்! துணை முதல்வர் உதயநிதி பற்றி அன்பில் மகேஷ்

11


UPDATED : அக் 01, 2024 08:01 PM

ADDED : செப் 29, 2024 06:14 PM

Google News

UPDATED : அக் 01, 2024 08:01 PM ADDED : செப் 29, 2024 06:14 PM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: துணை முதல்வர் உதயநிதி தான் எங்களுக்கு ரிப்போர்ட்டிங் ஆபிசர் என்று மகிழ்ச்சியுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறி உள்ளார்.

தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், கோவி. செழியன், ஆவடி நாசர் ஆகியோர் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்றதை அடுத்து இந் நிகழ்வை தி.மு.க., தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

உதயநிதி துணை முதல்வராகி உள்ளது குறித்து அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளதாவது;

இந்த நிகழ்வு உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது. நண்பராக மட்டுமல்ல, கட்சியின் தொண்டனாக பெருமைக்குரிய நிகழ்வாக இதை நான் பார்க்கிறேன்.

அவர்(உதயநிதி) துணை முதல்வராகிவிட்டார். இனிமேல் அவர் தான் எங்களின் ரிப்போர்ட்டிங் ஆபிசர். நாங்கள் உழைத்து எங்களின் ரிப்போர்ட்டை அவரிடன் கொடுக்கும் அளவுக்கு இன்னும் கூடுதலாக எங்களின் பொறுப்பு மேம்படும்.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.






      Dinamalar
      Follow us