sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராமதாஸ் முடிவால் அதிர்ச்சியில் அன்புமணி ஆதரவாளர்கள்

/

ராமதாஸ் முடிவால் அதிர்ச்சியில் அன்புமணி ஆதரவாளர்கள்

ராமதாஸ் முடிவால் அதிர்ச்சியில் அன்புமணி ஆதரவாளர்கள்

ராமதாஸ் முடிவால் அதிர்ச்சியில் அன்புமணி ஆதரவாளர்கள்


ADDED : ஜூன் 13, 2025 01:18 AM

Google News

ADDED : ஜூன் 13, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'தந்தைக்கு பிறகே தனயன்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக கூறிவிட்டதால், அன்புமணி ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை, கடந்த ஏப்ரல் 10ல் ராமதாஸ் நீக்கினார். அன்று முதல் தந்தை -- மகன் இடையே சமாதானத்தை ஏற்படுத்த, குடும்பத்தினர், கட்சியினர், நண்பர்கள் என பலரும் முயற்சித்து வந்தனர்.

அதன் பலனாக, தன்னுடைய மகள் வழி பேரன் முகுந்தன், மகள்கள் உட்பட பலருடன் ராமதாஸ் பேச்சு நடத்தினார்.

இதற்கு பலன் கிடைப்பதுபோல அறிகுறி தென்பட்ட நிலையில், கடந்த 10ம் தேதி, அன்புமணிக்கு நெருக்கமான, வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் பாலுவை நீக்கியதன் காரணமாக, நிலைமை மோசமானது.

இந்நிலையில் நேற்று, திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் பேட்டியளித்த ராமதாஸ். சமாதான முயற்சி தோல்வி அடைந்து விட்டதாக தெரிவித்தார். தந்தைக்கு பிறகே தனயன். தனக்கு பிறகே அன்புமணி என்பதையும் திட்டவட்டமாக அறிவித்தார்.

இதனால், அன்புமணி பக்கம் இருக்கும் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், மாவட்டச்செயலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தந்தை -- மகன் மோதலை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அவர்கள், கட்சியின் எதிர்காலம் அன்புமணி என்பதால், அவர் பக்கமே நின்றனர்.

ஆனால், 'சட்டசபை தேர்தல் வரை நானே தலைவராக இருப்பேன். கூட்டணி உட்பட அனைத்து முடிவுகளையும் நானே எடுப்பேன்' என, ராமதாஸ் அறிவித்துள்ளதால், அடுத்து நம் நிலை என்ன ஆகுமோ என அச்சமடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us