sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராமதாஸ் இல்லாதபோது தைலாபுரம் சென்ற அன்புமணி

/

ராமதாஸ் இல்லாதபோது தைலாபுரம் சென்ற அன்புமணி

ராமதாஸ் இல்லாதபோது தைலாபுரம் சென்ற அன்புமணி

ராமதாஸ் இல்லாதபோது தைலாபுரம் சென்ற அன்புமணி


UPDATED : ஜூலை 11, 2025 06:08 PM

ADDED : ஜூலை 11, 2025 02:20 AM

Google News

UPDATED : ஜூலை 11, 2025 06:08 PM ADDED : ஜூலை 11, 2025 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் இல்லாதபோது, தைலாபுரம் தோட்டத்திற்கு சென்ற பா.ம.க., தலைவர் அன்புமணி, தன் தாய் சரஸ்வதியை சந்தித்துப் பேசினார்.

பா.ம.க.,வில் அப்பா -- மகன் மோதல் நாளுக்கு நாள் முற்றி வரும் நிலையில், கும்பகோணத்தில் நேற்று நடந்த பொதுக்குழுவில் பங்கேற்க ராமதாஸ் சென்றிருந்தார்.

இந்நிலையில், திருமண விழா ஒன்றில் பங்கேற்க, நேற்று திண்டிவனம் சென்ற அன்புமணி, திடீரென தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்று, அங்கு, தன் தாய் சரஸ்வதியை சந்தித்துப் பேசினார். அப்போது, ராமதாஸ் அங்கு இல்லை.



தனக்கு எதிராக தொடர்ந்து ராமதாஸ் செயல்பட்டு வருவது பற்றியும், தன் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என கூறியது குறித்தும், வேதனையை அன்புமணி வெளிப்படுத்தியதாகவும், அவரது தாய் சமாதானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, கடந்த 8ம் தேதி, திண்டிவனம் அருகே ஓமந்துாரில் ராமதாஸ் நடத்திய செயற்குழு கூட்டத்தில், பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, சென்னையில் நேற்று அன்புமணி நடத்திய நடைபயணம் குறித்த ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றார்.

இரண்டே நாளில், அவர் அணி மாறியது, பா.ம.க.,வுக்குள் பரபரப்பாக பேசப்படுகிறது.






      Dinamalar
      Follow us