sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசு வழக்கறிஞர் பணிக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் * அண்ணாமலை வலியுறுத்தல்

/

அரசு வழக்கறிஞர் பணிக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் * அண்ணாமலை வலியுறுத்தல்

அரசு வழக்கறிஞர் பணிக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் * அண்ணாமலை வலியுறுத்தல்

அரசு வழக்கறிஞர் பணிக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் * அண்ணாமலை வலியுறுத்தல்


ADDED : டிச 14, 2024 10:04 PM

Google News

ADDED : டிச 14, 2024 10:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கு நடந்த தேர்வை கைவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

அரசு உதவி வழக்கறிஞர் பணியில் காலியாக உள்ள, 51 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக, தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முதல்நிலை தேர்வு, நேற்று பிற்பகல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு, 4,000க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

இந்நிலையில், பல மையங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, வழக்கறிஞர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், விண்ணப்பித்த பலரின் பெயர்கள் தேர்வு மையங்களில் விடுபட்டிருப்பதாகவும் தெரிகிறது.

வழக்கறிஞர்களுக்கான தேர்வு ஏற்பாடுகளையே முறையாக மேற்கொள்ளவில்லை என்றால், தேர்வாணையம் நடத்தும் இதர தேர்வுகளை நம்பி, அரசு பணிக்கான தேர்வுகள் எழுத காத்திருக்கும் பல லட்சம் இளைஞர்கள் கதி என்ன?

அரசு பணிக்கான தேர்வுகளை, இத்தனை அலட்சிய போக்கில் கையாளும் தி.மு.க., அரசை கண்டிக்கிறேன். முறையான மறுதேர்வு நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us