sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'ரெண்டுல ஒண்ணு' தொகுதிகளை பங்கு போட அண்ணாமலை யோசனை

/

'ரெண்டுல ஒண்ணு' தொகுதிகளை பங்கு போட அண்ணாமலை யோசனை

'ரெண்டுல ஒண்ணு' தொகுதிகளை பங்கு போட அண்ணாமலை யோசனை

'ரெண்டுல ஒண்ணு' தொகுதிகளை பங்கு போட அண்ணாமலை யோசனை

22


ADDED : ஜூன் 12, 2025 04:37 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 04:37 AM

22


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரதமர் மோடிக்கு, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில், கூறியுள்ளதாவது:

மதுரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், 'வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பின், தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமையும்' என்றார். அதை நாங்கள் வரவேற்கிறோம்.

ஆனால், கூட்டணி ஆட்சி அமைக்கப்பட வேண்டுமானால், சமீபத்தில் பா.ஜ., பெற்றுள்ள ஓட்டு சதவீதம் அடிப்படையில், தொகுதி பங்கீடு அமைய வேண்டும்.

கடந்த 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணிக்கு, 19.4 சதவீதம் ஓட்டுகள் கிடைத்தன. அதேநேரத்தில், பா.ஜ., கூட்டணி, 11.4 சதவீதம் ஓட்டுகள் பெற்றது. கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., நான்காவது இடத்திற்கு சென்றது. இரண்டாவது இடத்தை, பா.ஜ., கைப்பற்றியது.

எனவே, அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., பலத்தின் அடிப்படையில் தொகுதி பங்கீட்டை பெற்றால், கூட்டணி ஆட்சி என்பது நிச்சயம். அதாவது, இரண்டு சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க., போட்டியிட்டால், ஒரு சட்டசபை தொகுதியில், பா.ஜ., போட்டியிட வேண்டும்.

அ.தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையில் சரிபாதியை, பா.ஜ., கேட்டுப் பெற வேண்டும். அப்படி செய்தால் தான், 2029ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், 30 தொகுதிகளில் தே.ஜ., கூட்டணி வெற்றி பெற வழி ஏற்படும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us