சூழல் பாதுகாப்பு சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு
சூழல் பாதுகாப்பு சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு
ADDED : ஜன 14, 2026 07:11 AM

சென்னை: சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பிரிவுகளின் கீழ், கவர்னர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இவ்விருதுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்களை, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு பரிசீலித்து, தகுதியானவர்களை தேர்ந்தெடுத்துள்ளது.
அதன்படி, சமூக சேவை பிரிவில், நிறுவனம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த வெங்கட்ராமன் நினைவு அறக்கட்டளை தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
தனிநபர் பிரிவில், சென்னை மாவட்டத்தை சேர்ந்த ஆர்.சிவா, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பி.விஜயகுமார் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவில், பசுமை ராமேஸ்வரம் அறக்கட்டளையும், கோவை மாவட்டத்தை சேர்ந்த ஆர்.மணிகண்டனும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
வரும் குடியரசு தின விழாவில், கவர்னர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில், இதற்கான விருதுகள் வழங்கப்படும்.

