sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

த.வெ.க.,வினருக்கு முன்ஜாமின் அனுமதி

/

த.வெ.க.,வினருக்கு முன்ஜாமின் அனுமதி

த.வெ.க.,வினருக்கு முன்ஜாமின் அனுமதி

த.வெ.க.,வினருக்கு முன்ஜாமின் அனுமதி


ADDED : நவ 08, 2025 02:04 AM

Google News

ADDED : நவ 08, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:

கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்.,27 ல் த.வெ.க., பிரசார கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் பேசியபோது நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்தனர். விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டுள்ளது. சம்பவத்தின்போது மயக்கமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. அதை தாக்கியதாக பதிவான வழக்கில் த.வெ.க., நிர்வாகிகள் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன், தமிழமுதன், பெரியசாமி, ஹரிசுதன், கவுதம் தனசேகர், அன்புமணி, செந்தில்குமார், சுப்பிரமணி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தனர்.

நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் பாண்டி ஆஜரானார். நீதிபதி,'முன்ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. மனுதாரர்கள் 2 வாரங்களுக்கு சேலம் டவுன் போலீசில் ஆஜராக வேண்டும்,' என உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us