ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு அடுக்குமாடி வீடுகள்
ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு அடுக்குமாடி வீடுகள்
ADDED : பிப் 19, 2026 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - பாண்டியன்: சிதம்பரம், புவனகிரி சுற்றுப்பகுதிகளில் உள்ள ஆறு ஊராட்சி மக்கள், மழைக் காலங்களில், வீராணம் ஏரியில் திறக்கப்படும் நீரால் பாதிக்கப் படுகின்றனர்.
அவர்கள் வசதிக்காக, சி.முட்லுார் ஊராட்சியில் புயல் பாதுகாப்பு மையம் கட்ட வேண்டும். 50 ஆண்டுகளாக, 1,000க்கும் மேற்பட்டோர் நீர்நிலைகளுக்கு அருகே வசிக்கின்றனர். அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தர வேண்டும்.
அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன்: பல மாவட்டங்களில், 40 முதல் 50 ஆண்டுகளாக நீர்நிலை புறம்போக்குகளில் மக்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு வீடு கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. எதிர்காலத்தில் அங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

