sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உள்ஒதுக்கீடுக்கு எதிராக பேரணி ஐகோர்ட்டில் முறையீடு

/

உள்ஒதுக்கீடுக்கு எதிராக பேரணி ஐகோர்ட்டில் முறையீடு

உள்ஒதுக்கீடுக்கு எதிராக பேரணி ஐகோர்ட்டில் முறையீடு

உள்ஒதுக்கீடுக்கு எதிராக பேரணி ஐகோர்ட்டில் முறையீடு


ADDED : நவ 09, 2024 02:59 AM

Google News

ADDED : நவ 09, 2024 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் நேற்று, கிருஷ்ணசாமி ஆஜரானார்.

அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்த முடிவு செய்திருந்ததாகவும், மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் அனுமதி மறுத்ததாகவும் கூறிய அவர், அனுமதி அளிக்குமாறு முறையிட்டார்.

இதையடுத்து, இந்தப் பிரச்னை குறித்து வழக்கு தாக்கல் செய்யப்படும் பட்சத்தில், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும், வழக்கு தாக்கல் செய்ய நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை எனவும், முதல் பெஞ்ச் தெரிவித்தது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரானைட் குவாரி டெண்டரை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தன. முன்னாள் எம்.பி., செல்லக்குமார் ஆஜராகி அவகாசம் கோரினார்.

விசாரணையை, நவ., 15க்கு தள்ளி வைத்த முதல் பெஞ்ச், அன்று வாதங்களை துவங்கவில்லை என்றால், வழக்கை தள்ளுபடி செய்வதோடு, டெண்டருக்கு விதித்திருந்த தடையை நீக்குவதாகவும் தெரிவித்தது.






      Dinamalar
      Follow us