தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு வரும் 31 வரை விண்ணப்பம்
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு வரும் 31 வரை விண்ணப்பம்
ADDED : ஜன 20, 2025 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : தமிழக தொழில்நுட்பத்துறை சார்பில் நடத்தப்படும், தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கு, வரும், 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, தொழில்நுட்ப கல்வி கமிஷனர் மற்றும் தேர்வு வாரிய தலைவரான ஆபிரகாம் வெளியிட்ட அறிவிப்பு:
தொழில்நுட்ப கல்வி துறையால், அடுத்த மாதம் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
இந்த தேர்வுகளுக்கு, வரும், 31ம் தேதி வரை, www.tndtegteonline.in என்ற இணைய தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பிப்., 2 முதல் 4ம் தேதி வரை, விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.