உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 13, 2026 11:54 PM
அ நிறம் | அளவு
சென்னை: நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்ட அறிக்கை:
கிராம சபைகளை போல், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவது, ஏரியா சபைக் கூட்டங்கள். பேரூராட்சி பகுதிகளில் ஒரு வார்டு என்பதை மூன்று ஏரியா சபையாகவும், நகராட்சி பகுதிகளில் ஒரு வார்டு என்பதை நான்கு ஏரியா சபையாகவும், மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகைக்கு ஏற்பவும் பிரித்து, ஜன., 25, ஏப்., 14, செப்., 15, டிச., 10 என, கூட்டங்கள் நடத்த, கடந்த அரசு அறிவித்தது.
அந்த வகையில், நாளை ஒவ்வொரு வார்டிலும் நடத்த வேண்டிய ஏரியா சபைக் கூட்டங்கள் குறித்த அறிவிப்பு, இதுவரை வெளியிடப்படாதது வருத்தம் தருகிறது. இந்தக் கூட்டங்களை நடத்த, முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
