எங்களுக்கு சமூகநீதி பாடம் யாரும் எடுக்க வேண்டாம்
எங்களுக்கு சமூகநீதி பாடம் யாரும் எடுக்க வேண்டாம்
ADDED : செப் 13, 2026 11:55 PM
'மாநில கட்சி' என்ற அந்தஸ்தை வி.சி.க., பெற்றிருப்பது பலரது கண்களை உறுத்து கிறது. பலர் பொறாமையில் குறை கண்டு பிடிக்க முயற்சிக்கின்றனர்; ஏதேதோ அவதுாறு பரப்புகின்றனர்.
சட்டசபையில் முதல்வர் விஜய் என்ன பேசினார் என உண்மையிலேயே எனக்கு தெரியாது. கருத்து சொல்வதில் எப்போதும் நான் அவசரம் காட்டியதில்லை. த.வெ.க.,வுடன் ஐந்து ஆண்டுகள் துணை நிற்போம் என்பதை உறுதிப்படுத்தவே, அவர்களின் அமைச்சரவையில் இடம்பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தேர்தலுக்கு பின், த.வெ.க.,வினர் ஆதரவு கேட்டனர்; ஆதரவு அளித்ததால், அமைச்சர் பதவி வழங்கியுள்ளனர். ஒருவேளை, தி.மு.க., கூட்டணி வென்றிருந்தால், அமைச்சரவையில் வி.சி.க.,வுக்கு இடம் கிடைத்திருக்குமா?
இன்று காலம் தந்திருக்கிறது. இனி தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சி தான். எக்காலத்திலும் கருத்தின் அடிப்படையில் யாரும் யாரையும் குழப்ப முடியாது. சமூகநீதி தொடர்பாக எங்களுக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை.
- திருமாவளவன்
தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி
