sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிரதமருடன் தமிழக இளைஞர்கள் 40 பேர் கலந்துரையாட ஏற்பாடு

/

பிரதமருடன் தமிழக இளைஞர்கள் 40 பேர் கலந்துரையாட ஏற்பாடு

பிரதமருடன் தமிழக இளைஞர்கள் 40 பேர் கலந்துரையாட ஏற்பாடு

பிரதமருடன் தமிழக இளைஞர்கள் 40 பேர் கலந்துரையாட ஏற்பாடு


ADDED : டிச 21, 2024 09:01 PM

Google News

ADDED : டிச 21, 2024 09:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஜன., 12ம் தேதி தமிழக இளைஞர்கள் 40 பேர் பிரதமர் மோடியுடன் உரையாட இருப்பதாக மத்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறையின் தமிழகம், புதுச்சேரி இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'டில்லியில் ஜன.,11, ஜன.,12ல் 28வது தேசிய இளைஞர் திருவிழா நடைபெறும். அதன் ஒரு பகுதியாக ஜன.12ல் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளையொட்டி நடைபெறும் விழாவில் தமிழக இளைஞர்கள் 40 பேர் பிரதமர் மோடியுடன் உரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக இரண்டு கட்டங்களாக இளைஞர்கள் தேர்வு ஏற்கனவே நடந்தது. இறுதிக்கட்ட தேர்வு டிச.,27, டிச.,28ல் சென்னையில் நடக்கிறது. இதில் 250 பேர் பங்கேற்பர். இவர்களில் 40 பேர் தேர்வு செய்யப்படுவர். இவர்கள் தான் பிரதமரை சந்திப்பர்,' எனக் கூறினார்.






      Dinamalar
      Follow us