ADDED : ஜன 01, 2025 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : பள்ளி மாணவ - மாணவியரின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில், அவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன.
ஏற்கனவே, மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. மாநில போட்டிகளை, வரும் 3, 4ம் தேதிகளில் நடத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, 1 -- 5 வகுப்புகளுக்கு, 4ம் தேதி கோவையிலும், 6 - 8 வகுப்புகளுக்கு, அதே நாளில் திருப்பூரிலும் போட்டிகள் நடக்க உள்ளன.
மேலும், 9, 10ம் வகுப்புகளுக்கான போட்டிகள், 3, 4ம் தேதிகளில் ஈரோட்டிலும், 11, 12ம் வகுப்புகளுக்கு நாமக்கல்லிலும் நடக்க உள்ளன.

