sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கேட்டது 5 ரூபாய் கிடைத்தது 50 காசு

/

கேட்டது 5 ரூபாய் கிடைத்தது 50 காசு

கேட்டது 5 ரூபாய் கிடைத்தது 50 காசு

கேட்டது 5 ரூபாய் கிடைத்தது 50 காசு

1


ADDED : ஜன 09, 2025 06:26 AM

Google News

ADDED : ஜன 09, 2025 06:26 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதிக காலி பணியிடங்களால் ஒரு ஊழியரே, இரண்டு - மூன்று கடைகளை கூடுதலாக கவனிக்க வேண்டி உள்ளது.

எனவே, ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியில் ஈடுபடுவோருக்கு கார்டுக்கு, 5 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குமாறு, அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கார்டுக்கு, 50 காசு ஊக்கத்தொகை வழங்க, அதிகாரிகளுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியில் ஈடுபடுவோருக்கு, ஒரு கார்டுக்கு 50 காசு வீதம் வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கு அறிவுரை வழங்கி, அத்தொகை ரேஷன் ஊழியர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us