sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டி.ஜி.பி., சுற்றறிக்கைக்கு வக்கீல்கள் எதிர்ப்பு திரும்ப பெற வலியுறுத்தி சங்கம் கடிதம்

/

டி.ஜி.பி., சுற்றறிக்கைக்கு வக்கீல்கள் எதிர்ப்பு திரும்ப பெற வலியுறுத்தி சங்கம் கடிதம்

டி.ஜி.பி., சுற்றறிக்கைக்கு வக்கீல்கள் எதிர்ப்பு திரும்ப பெற வலியுறுத்தி சங்கம் கடிதம்

டி.ஜி.பி., சுற்றறிக்கைக்கு வக்கீல்கள் எதிர்ப்பு திரும்ப பெற வலியுறுத்தி சங்கம் கடிதம்

2


ADDED : அக் 18, 2024 10:32 PM

Google News

ADDED : அக் 18, 2024 10:32 PM

2


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடிகளை சந்தித்து, சதித் திட்டம், கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவதாக, டி.ஜி.பி., வெளியிட்ட சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சந்தேகம்


போலீஸ் கமிஷனர்கள், ஐ.ஜி.,- - டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி.,க்களுக்கு, தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், 'கடந்த ஜன., 1ல் இருந்து ஜூலை 20 வரை, தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 84 ரவுடிகளை, 396 வழக்கறிஞர்கள் 1,987 முறை சந்தித்துள்ளனர். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 15 ரவுடிகளை மட்டும், 546 முறை சந்தித்துள்ளனர்.

'வழக்கு தொடர்பாக, கைதிகளை வழக்கறிஞர்கள் சந்தித்தாலும், சிலரின் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படியாக உள்ளன' என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கைக்கு, வழக்கறிஞர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

அத்துடன், சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலர் ஆர்.கிருஷ்ணகுமார் ஆகியோர், டி.ஜி.பி.,க்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

நற்பெயருக்கு களங்கம்


அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

ஒட்டுமொத்த வழக்கறிஞர்கள் சமூகத்தின் மீது தேவையற்ற அவதுாறுகளையும், பொத்தாம் பொதுவாக குற்றஞ்சாட்டி வழக்கறிஞர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் சுற்றறிக்கை உள்ளது.

வழக்கில் தொடர்புடைய தன் கட்சிக்காரர்களை சந்திக்க, வழக்கறிஞர்களுக்கு உரிமை உள்ளது. அந்த உரிமையை பறிக்கும் வகையில் காவல் துறை செயல்படுவது, நீதி பரிபாலனத்துக்கு எதிரானது.

ஒட்டுமொத்த வழக்கறிஞர்கள் சமுதாயத்தையும் சந்தேக கண்ணோட்டத்துடன் காவல் துறை அணுகினால், அது நீதித்துறை மீதான நம்பகத்தன்மையை இழக்கச் செய்யும்.

சிறையில் கைதிகளை சந்திக்கும் வழக்கறிஞர்கள், கட்டப்பஞ்சாயத்து, சதித் திட்டத்தில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி, டி.ஜி.பி., வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us