ADDED : ஆக 11, 2011 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில், நில மோசடி வழக்கில், 'அட்டாக்' பாண்டி கூட்டாளி ஆர்.கே.
பாலன், மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று சரணடைந்தார். கோவை ஜவுளி வியாபாரி ஜெகதீசன் கொடுத்த நில அபகரிப்பு வழக்கில், வேளாண் விற்பனைக்குழு முன்னாள் தலைவர் அட்டாக் பாண்டி, தூத்துக்குடி வேளாண் விற்குனைக்குழு உதவி பொறியாளர் சக்திவேல் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில், அட்டாக் பாண்டி கூட்டாளி ஆர்.கே. பாலன், இரண்டாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று சரணடைந்தார். அவரை, ஆக., 24ம் தேதி வரை ரிமாண்ட் செய்து, அன்றைய தினம் முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்த, மாஜிஸ்திரேட் உமா மகேஸ்வரி உத்தரவிட்டார்.

