sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசு மீது களங்கம் கற்பிக்க முயற்சி: அமைச்சர் சேகர் பாபு

/

அரசு மீது களங்கம் கற்பிக்க முயற்சி: அமைச்சர் சேகர் பாபு

அரசு மீது களங்கம் கற்பிக்க முயற்சி: அமைச்சர் சேகர் பாபு

அரசு மீது களங்கம் கற்பிக்க முயற்சி: அமைச்சர் சேகர் பாபு

2


ADDED : மார் 18, 2025 08:51 PM

Google News

ADDED : மார் 18, 2025 08:51 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: இரு கோவில்களிலும் உயிரிழந்த பக்தர்கள், உடல் நலக்குறைவால் உயிரிழந்தனர் என்று தெரிவித்துள்ள அமைச்சர் சேகர்பாபு, அரசு மீது களங்கம் கற்பிக்க முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அமைச்சர் சேகர் பாபு அறிக்கை:

திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு நேற்று முன்தினம் (மார்ச்-16) சுவாமி தரிசனம் செய்யvகாரைக்குடியை சேர்ந்த ஓம்குமார் வந்திருந்தார்.

அவரது குடும்பத்தினர் முன்னரே தரிசனம் செய்ய வரிசையில் சென்ற நிலையில் தனியாக இவர் சென்றார்.

அவருக்கு ஏற்கனவே உள்ள மூச்சுத்திணறல் நோயினால் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்தார்.

அதேபோன்று ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு இன்று (18.03.2025) விடியற்காலை ஸ்படிகலிங்க தரிசனத்திற்கு வருகை தந்த பக்தர் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக மயங்கிய நிலையில் காணப்பட்டார். அவரை திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் முதலுதவி மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட இரண்டு திருக்கோவில்களிலும் உயிரிழந்த பக்தர்கள் தங்களது உடல் நலக்குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ளனர்.

கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழக்கவில்லை. பக்தர்களின் அவசர சிகிச்சை மற்றும் முதலுதவிக்காக இத்திருக்கோயில்கள் உள்ளிட்ட 17 திருக்கோவில்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து திருக்கோவில்களிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதி, முதியோர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தனி வரிசைமுறை போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.

மதத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைத்தவர்களுக்கு மக்கள் கொடுத்த சம்மட்டி அடியால் அண்ணாமலை போன்றோர் ஹிந்து சமய அறநிலையத்துறையின் மீது இதுபோன்ற களங்கம் கற்பிக்க முயல்வதில் வியப்பேதுமில்லை.

இவ்வாறு சேகர் பாபு அறிக்கையில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us