sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போலீஸ் ஸ்டேஷனில் கொள்ளை முயற்சி; தடுக்க முயற்சித்த போலீஸ் மீது தாக்குதல்

/

போலீஸ் ஸ்டேஷனில் கொள்ளை முயற்சி; தடுக்க முயற்சித்த போலீஸ் மீது தாக்குதல்

போலீஸ் ஸ்டேஷனில் கொள்ளை முயற்சி; தடுக்க முயற்சித்த போலீஸ் மீது தாக்குதல்

போலீஸ் ஸ்டேஷனில் கொள்ளை முயற்சி; தடுக்க முயற்சித்த போலீஸ் மீது தாக்குதல்

23


ADDED : ஜன 11, 2025 12:36 PM

Google News

ADDED : ஜன 11, 2025 12:36 PM

23


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி போதைப்பொருள் நுண்ணறிவு போலீஸ் ஸ்டேஷனில் திருட முயன்ற போது, அதனை தடுத்த போலீசார் மீது கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஈஸ்வர் நகரில் போதைப்பொருள் நுண்ணறிவு போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ளது. இங்கு சட்டவிரோதமாக விற்பனை மற்றும் கடத்தி வரப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்படுவது வழக்கம். இந்த சூழலில், மாடி வழியாக அந்த ஸ்டேஷனின் உள்ளே மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போதைப்பொருள் நுண்ணறிவு போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்து வந்துள்ளனர். இதனை அறிந்த கொள்ளையர்கள், உடனடியாக அங்கிருந்து தப்பியோட முயன்றனர். அப்போது, அவர்களை போலீஸ்காரர் ஒருவர் மடக்கி பிடிக்க முற்பட்டார். இதனை பார்த்து உஷாரான கொள்ளையர்கள், அந்த போலீசாரை பயங்கரமாக தாக்கி விட்டு, தப்பியோடினர். இதில், போலீஸ்காரர் பலத்த காயமடைந்தனர். ஆனால், அதன் பின்னால் வந்த மற்ற போலீஸார், சாதுர்யமாக செயல்பட்டு, அந்த கொள்ளையர்களை பிடித்தனர்.

பின்னர், இருவரையும் கைது செய்து அல்லிநகரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். அவர்களிடம், பெரியகுளம் டி.எஸ்.பி., நல்லு விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்டேஷனில் இருக்கும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை எடுத்துச் செல்ல இவர்கள் வந்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us