sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆத்தூர் நகைக்கடையில் துணிகர கொள்ளை முயற்சி: துப்பாக்கியுடன் வந்தவர்களை விரட்டிப் பிடித்த மக்கள்

/

ஆத்தூர் நகைக்கடையில் துணிகர கொள்ளை முயற்சி: துப்பாக்கியுடன் வந்தவர்களை விரட்டிப் பிடித்த மக்கள்

ஆத்தூர் நகைக்கடையில் துணிகர கொள்ளை முயற்சி: துப்பாக்கியுடன் வந்தவர்களை விரட்டிப் பிடித்த மக்கள்

ஆத்தூர் நகைக்கடையில் துணிகர கொள்ளை முயற்சி: துப்பாக்கியுடன் வந்தவர்களை விரட்டிப் பிடித்த மக்கள்

1


ADDED : ஆக 07, 2025 10:22 PM

Google News

1

ADDED : ஆக 07, 2025 10:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்தூர்:ஆத்தூரில் நகைக்கடை உரிமையாளர்கள் மீது ஆசிட் வீசி, நகை கொள்ளையடிக்க வந்த இருவர் சிக்கினர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் கடைவீதி பகுதியை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன். ஏவிஎஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்துள்ளார். இன்று இரவு 8:45 மணியளவில் இருவர் நகை வாங்குவது போல் வந்துள்ளனர்.

அங்குள்ள நகைகளை காட்டிக் கொண்டிருந்தபோது, ஒரு நபர் கையில் வைத்திருந்த ஆசிட் பாட்டிலை, நகைக்கடை உரிமையாளர் வைத்தீஸ்வரன் அவரது மனைவி செல்வ லட்சுமி கடையில் பணிபுரிந்த வசந்தி ஆகியோர் மீது ஊற்றியுள்ளார்.

தொடர்ந்து டிராவில் இருந்த 80 பவுன் நகையும் கொள்ளையடிக்க முயன்றனர். சுதாரித்துக் கொண்ட கடை உரிமையாளர் வைத்தீஸ்வரன், அந்த நகைகளை பிடுங்கியபோது ஆசிட் ஊற்றியும் துப்பாக்கியை காட்டி மிரட்டியும் ஓட முயற்சித்தனர். அப்போது அதில் ஒருவரை கடை உரிமையாளர் மடக்கிப்பிடித்தார்.

மற்றொரு நபர் கடைவீதி வழியாக தப்பி ஓடும்போது அப்பகுதி மக்கள் விரட்டிச் சென்று ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மடக்கி பிடித்தனர். அந்த நபரிடம் ரிவால்வர் துப்பாக்கி இருந்தது. துப்பாக்கியை காட்டி பொதுமக்களிடம் மிரட்டியுள்ளார்.

ஒரு வழியாக பொதுமக்கள் அந்த நபரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட இருவரையும் போலீசார் மீட்டு அவர்களிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக ஆத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆத்தூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள நகைக்கடையில் துணிகர கொள்ளை சம்பவம் ஆத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us