sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மணல் குவாரி திறக்க கெடு லாரி உரிமையாளர் எச்சரிக்கை

/

மணல் குவாரி திறக்க கெடு லாரி உரிமையாளர் எச்சரிக்கை

மணல் குவாரி திறக்க கெடு லாரி உரிமையாளர் எச்சரிக்கை

மணல் குவாரி திறக்க கெடு லாரி உரிமையாளர் எச்சரிக்கை


ADDED : மார் 21, 2024 01:19 AM

Google News

ADDED : மார் 21, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்,:சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர் சங்க செயலர் கண்ணையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் மணல் குவாரிகளை திறக்காவிட்டால் லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தோம். அதன் எதிரொலியாக, சேலம் கனிம வள உதவி இயக்குனர் பன்னீர்செல்வம் நடத்திய பேச்சில், செம்மண், மொரம்பு மண் எடுத்துச்செல்ல விண்ணப்பித்தால், 'பர்மிட்' தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. அத்துடன், எம் - சாண்ட் மணல் விலையை குறைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதிலுள்ள நடைமுறை சிக்கல்களை களைந்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதால், தேர்தல் புறக்கணிப்பை தற்காலிகமாக, 10 நாட்களுக்கு ஒத்தி வைத்துள்ளோம்.

அதே நேரம் மணல் குவாரிகளை அரசு நினைத்தால் மட்டுமே திறக்க முடியும். ஏற்கனவே மணல் குவாரிகள் மூடப்பட்டது தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு நிலுவையில் உள்ளது.

தற்போது மூடிய மணல் குவாரிகளை திறக்க, மற்றொரு வழக்கை தொடர சங்கம் சார்பில் முடிவு செய்துள்ளோம். மணல் குவாரியை அரசே திறக்க வேண்டும். இல்லையெனில் திட்டமிட்டப்படி தமிழகம் முழுதும் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us