sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வங்கி ஊழியர்கள் 24, 25ல் போராட்டம்

/

வங்கி ஊழியர்கள் 24, 25ல் போராட்டம்

வங்கி ஊழியர்கள் 24, 25ல் போராட்டம்

வங்கி ஊழியர்கள் 24, 25ல் போராட்டம்


ADDED : மார் 18, 2025 05:11 AM

Google News

ADDED : மார் 18, 2025 05:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; 'வங்கிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும், 24 மற்றும் 25ம் தேதிகளில், வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கும்' என, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து, சங்கத்தின் பொதுச்செயலர் வெங்கடாச்சலம் கூறியதாவது: பல்வேறு வங்கிகளில், 2 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், வங்கிகளில் ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள், வங்கி ஊழியர்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரிக்க துவங்கி உள்ளன. எனவே, அனைத்து வங்கிக் கிளைகளிலும், ஆயுதம் தாங்கிய காவலர்களை பணி அமர்த்த வேண்டும்.

வங்கிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிகளில் வாரத்துக்கு, ஐந்து நாட்கள் வேலையை அமல்படுத்த வேண்டும்.

வங்கி ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளுக்கு, வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

வங்கிகளில், 'அவுட்சோர்சிங்' முறையில் வெளியாட்களை பணி அமர்த்தக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 24 மற்றும், 25ம் தேதிகளில், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

இப்போராட்டத்தில், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட, ஒன்பது சங்கங்களை சேர்ந்த வங்கி ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us