ADDED : பிப் 06, 2025 06:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; திருநெல்வேலியில் உள்ள தேசியமய வங்கியில் 2007-09 ல் தலைமை மேலாளராக பணிபுரிந்தவர் பாலசுப்பிரமணியன். அவர் உட்பட சிலர் கூட்டுச் சதி செய்து ஒரு தொழில் நிறுவனத்திற்கு விதிகளை மீறி கடன் வழங்கி வங்கிக்கு ரூ.1 கோடியே 26 லட்சத்து 91 ஆயிரத்து 515 இழப்பு ஏற்படுத்தியதாக சி.பி.ஐ.,வழக்கு பதிந்தது. மதுரை சி.பி.ஐ.,நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
பாலசுப்பிரமணியன், கல்யாணசுந்தரம், அன்னசரஸ்வதி, மோகன்ராஜ், கீதாவிற்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, பாலசுப்பிரமணியனுக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம், மற்றவர்களுக்கு தலா ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சண்முகவேல் உத்தரவிட்டார்.