sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வீடு கட்டும் திட்ட நிதி கிடைக்காமல் ஊராட்சிகளில் பயனாளிகள் தவிப்பு

/

வீடு கட்டும் திட்ட நிதி கிடைக்காமல் ஊராட்சிகளில் பயனாளிகள் தவிப்பு

வீடு கட்டும் திட்ட நிதி கிடைக்காமல் ஊராட்சிகளில் பயனாளிகள் தவிப்பு

வீடு கட்டும் திட்ட நிதி கிடைக்காமல் ஊராட்சிகளில் பயனாளிகள் தவிப்பு


ADDED : நவ 26, 2024 11:41 PM

Google News

ADDED : நவ 26, 2024 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:வீடில்லாத மக்கள் பாதுகாப்புடன் வசிக்க, 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டம் என்ற பெயரில், மாநில அரசு வீடு கட்டித்தரும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, பட்டா நிலத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வரும் பயனாளிகள், 400 சதுரடியில் வீடு கட்ட, அரசின் சார்பில், 3.50 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.

இந்த பணம், வீடு கட்டும் நிலைக்கேற்ப நான்கு தவணைகளில் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

'கடந்தாண்டு, வீடுகளை கட்டியவர்களுக்கு உரிய நிதி வழங்கப்பட்டு விட்ட நிலையில், நடப்பாண்டு, வீடு கட்டும் பயனாளிகளுக்கு உரிய சமயத்தில் நிதி ஒதுக்கீடு வரவில்லை; இதனால், பயனாளிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்' என, ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கூறியதாவது:

கலைஞர் வீடு கட்டும் திட்டம் உட்பட அரசின் திட்டங்களில் பயன்பெறும் பயனாளிகளுக்கு, உரிய தேதியில் நிதி ஒதுக்கீடு வருவதில்லை.

ஒரே சீராக அனைத்து ஊராட்சிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யாமல், 'குதிரை பந்தய' நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதாவது, குறிப்பிட்ட சில ஊராட்சிகளுக்கு, உடனுக்குடன் நிதி ஒதுக்கப்படுகிறது.

மற்ற ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்குவதில் காலதாமதம் செய்யப்படுகிறது. இந்த நடைமுறையை மாற்றி அனைத்து ஊராட்சிகளுக்கும் ஒதுக்கப்படும் திட்டங்கள், தேர்ந்தெடுக்கப்படும் திட்டங்கள், பயனாளி எண்ணிக்கைக்கு ஏற்ப நிதி ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us