sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஊக்கத்தொகை வழங்குவதில் துரோகம்: பா.ம.க.,

/

ஊக்கத்தொகை வழங்குவதில் துரோகம்: பா.ம.க.,

ஊக்கத்தொகை வழங்குவதில் துரோகம்: பா.ம.க.,

ஊக்கத்தொகை வழங்குவதில் துரோகம்: பா.ம.க.,


ADDED : மே 29, 2025 06:23 AM

Google News

ADDED : மே 29, 2025 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:

கடந்த 2024 - -25ல் சாதாரண வகை நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, 100 கிலோ எடையுள்ள குவின்டாலுக்கு 2,369 ரூபாயாகவும், சன்னரக நெல்லுக்கான ஆதரவு விலையை, 2,389 ரூபாயாகவும், மத்திய அரசு உயர்த்தி உள்ளது. கடந்த ஆண்டைவிட, குவின்டாலுக்கு வெறும் 69 ரூபாய், அதாவது 3 சதவீதம் மட்டும் உயர்த்துவது போதுமானது அல்ல.

நெல்லுக்கு கொள்முதல் விலை நிர்ணயிக்கும்போது, விவசாயிகளின் நலனை, மத்திய அரசு கருத்தில் கொள்வதில்லை. கொள்முதலுக்கான ஊக்கத்தொகை வழங்குவதில், தமிழக அரசும் துரோகம் செய்கிறது. கடந்த ஆண்டில், ஒரு குவின்டால் நெல்லுக்கு, சாதாரண வகைக்கு 105 ரூபாய், சன்ன ரகத்துக்கு 120 ரூபாய் மட்டுமே ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.

ஒடிஷாவில் குவின்டாலுக்கு 800 ரூபாய், தெலுங்கானாவில் குவின்டாலுக்கு 500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதுபோல் தமிழக அரசும் குவின்டாலுக்கு 1,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

மத்திய அரசிடம் பேசி, ஒரு குவின்டாலுக்கு 3,500 ரூபாய் வீதம், கொள்முதல் விலை வழங்கப்படுவதை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us