sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'ஜனநாயகத்திற்கு செய்யும் துரோகம்'

/

'ஜனநாயகத்திற்கு செய்யும் துரோகம்'

'ஜனநாயகத்திற்கு செய்யும் துரோகம்'

'ஜனநாயகத்திற்கு செய்யும் துரோகம்'


ADDED : ஜன 03, 2025 07:02 PM

Google News

ADDED : ஜன 03, 2025 07:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'எதிர்க்கட்சியாக இருந்தப்போது, மக்கள் நடத்திய போராட்டங்களை தன்வயப்படுத்திய தி.மு.க., தற்போது எதிர்க்கட்சிகளை போராட விடாமல் தடுத்து வருகிறது' என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

அண்ணா பல்கலை மாணவிக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த தடை விதித்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களளை கைது செய்யும் தி.மு.க.,வின் கொடுங்கோல் போக்கு கண்டனத்திற்குரியது.

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து, அறவழியில் போராடுவதற்கே அனுமதி மறுப்பதும், துண்டறிக்கை கொடுப்போரைக்கூட கைது செய்து ஒடுக்குவதுமான இச்செயல்பாடுகள் யாவும் பாசிசப் போக்காகும்.

கடந்த காலத்தில் மக்கள் தன்னெழுச்சியாக நடத்திய அறப்போராட்டங்களை எல்லாம் தன்வயப்படுத்தினர். அவற்றை வைத்து அரசியல் ஆதாயம் அடைந்து, ஓட்டு அரசியலில் தி.மு.க., லாபம் பெற்றது. ஆளும் கட்சியானதும், எதிர்க்கட்சிகளை முழுதும் போராட விடாமல் முடக்குவதும், அரசே வன்முறைகளை ஏவி விடுவதும் ஜனநாயகத்திற்கு செய்யும் துரோகம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us