sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நிரம்பியது பில்லூர் அணை: பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

/

நிரம்பியது பில்லூர் அணை: பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

நிரம்பியது பில்லூர் அணை: பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

நிரம்பியது பில்லூர் அணை: பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

6


ADDED : ஜூன் 16, 2025 08:29 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 08:29 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: கோவை, திருப்பூருக்கு குடிநீர் வழங்கும் பில்லூர் அணை நிரம்பி வழிகிறது. பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

கோவை, நீலகிரி மாவட்ட எல்லையில், வனப்பகுதியில் உள்ள பில்லூர் அணையின் நீர்மட்ட உயரம், 100 அடியாகும். கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் முக்கிய குடிநீர் ஆதாரமாக இந்த அணை அமைந்துள்ளது.

அணையின் பாதுகாப்பு நலன் கருதி, 97 அடிக்கு நீர்மட்டம் உயரும்போது, அணை நிரம்பியதாக அறிவிக்கப்படுவது வழக்கம். அதன் பின் அணைக்கு வருகின்ற தண்ணீர் முழுவதையும் நான்கு மதகுகள் மற்றும் பவானி ஆற்றில் திறந்து விடுவர்.

நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், நேற்று இரவு பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று மாலை அணையின் நீர்மட்டம் 82.25 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியது. இரவு, 11:00 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

நள்ளிரவு 2:30 மணிக்கு அணையின் முழு கொள்ளளவான, 97 அடியை எட்டி அணை நிரம்பியது. இதனால் அணைக்கு வருகின்ற தண்ணீர் முழுவதையும் அப்படியே நான்கு மதங்கள் வழியாகவும், மின்சாரம் உற்பத்தி செய்யவும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அணையில் இருந்து நான்கு மதகுகள் வழியாக தலா, 2 ஆயிரம் கன அடியும், மின்சாரம் உற்பத்தி செய்ய, 6000 கன அடியும் தண்ணீரும் என மொத்தம் 14 ஆயிரத்து 160 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us